துப்பாக்கி முனையில் அக்காள் தங்கை பலாத்காரம் - குற்றவாளிகளை பிடிக்க உபி முதல்வர் உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் துப்பாக்கி முனையில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக கூட்டு பலாத்காரம் அதிகாரித்து வருகிறது. நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு சிறுமிகளை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
காசர்வா கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்து தனது தாயாரை பார்க்க 13, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் சென்றனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமியை வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் இரண்டு சிறுமிகளையும் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். இந்த கும்பல்
குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கூறினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாய்க்காக இரண்டு வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் முசாபர்நகர் அருகியுள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வீடு அருகேயுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் சிறுமியை அருகேயுள்ள வீட்டிற்குள் தூக்கிச்சென்று துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை வீடியோ எடுத்து மிரட்டியே பலாத்காரம் செய்தனர்.
தினந்தோறும் சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாகி வருவதால் கிராமப்புறங்களில் ரோந்துப்பணியை அதிகரிக்குமாறு முதல்வர் ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.