For Daily Alerts
Just In
ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது!
ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடப்பா: ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. வேறு பணிகளுக்கு செல்வோரையும் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி ஆந்திரா போலீஸ் கைது செய்கிறது.
தற்போது கடப்பா வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிப்பேட்டை பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக ஒரு காரையும் ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
Comments
English summary
The Andhra police arrested Six for men smuggling red sandalwood.
Story first published: Sunday, July 9, 2017, 8:47 [IST]