For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாக்லெட் வாங்கிக் கொடுத்து 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. டெல்லியில் கொடுமை

டெல்லியில் 6 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 6 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் காஷ்மீரி கேட் பகுதியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 6 வயது பெண் குழந்தை உள்ளது. அந்த குழுந்தை கடந்த புதன்கிழமை இரவு தொடர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்த குழந்தையின் தாய் அங்குள்ள அருணா ஆசப் அலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 A six-year-old girl raped in delhi

சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுமியின் அந்தரங்கப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குழுந்தையின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குழந்தை, சிவா அங்கிள் அடித்துவிட்டார் என்று திரும்பத் திரும்ப கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் சிவா என்ற பெயர் கொண்ட 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது குற்றம் செய்த சிவா என்ற நபர், "நான்தான் சிறுமியை பலாத்காரம் செய்தேன்" என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடனே அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா, வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நபர் என்றும், ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்றும் தெரிய வந்தது. விசாரணையில், "சாக்லெட் வாங்கிக் கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

English summary
30 years youth was arrested for A six-year-old girl raped in delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X