For Daily Alerts
Just In
கல்விக் கடன் திட்டத்திற்கு கலாம் பெயர்- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பெயரை மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கு சூட்டி அஞ்சலி செலுத்தியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேகாலயா மாநிலத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஐ.ஐ.எம் கருத்தரங்கில் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றியபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனையடுத்து நாடே அவருடைய மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பள்ளி கல்வியை முடித்து கல்லுாரியில் இணையும் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரையிலான் கல்வி கடன்களை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கான இத்திட்டத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Comments
abdul kalam kalam death education kejriwal டெல்லி அப்துல் கலாம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கல்விக் கடன் delhi
English summary
Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday announced that the government’s Higher Education and Skill Education Guarantee Scheme will be named after former President A P J Abdul Kalam, who passed away in Shillong on Monday.
Story first published: Wednesday, July 29, 2015, 8:38 [IST]