டெல்லியில் பல இடங்களில் புழுதிப் புயல்.. இரவு முழுக்க மக்கள் அவதி
டெல்லியில் பல இடங்களில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை புழுதிப் புயல் வீசியதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
டெல்லி: டெல்லியில் பல இடங்களில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை புழுதிப் புயல் வீசியதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
டெல்லியில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் கடந்த சில வருடங்களாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு, கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்கிறது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை தொடங்கிய புயல் அதிகாலை வரை வீசியது. மொத்தமாக போக்குவரத்து இதனால் பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுக்க பல இடங்களில் மோசமாக புழுதிப்புயல் வீசி வருகிறது. புழுதிப் புயலால் டெல்லி வெப்பநிலை 33 டிகிரியில் இருந்து 22 டிகிரியாக குறைந்தது.
Dust storm in Delhi. A pale pink moringa flower fell on my windshield. Semal cotton, carrying black seeds, swivelled wildly in the wind. Golden Amaltas flowers nodded from the roadside. If I didnt know these names, perhaps I'd love these species less.
— Neha Sinha (@nehaa_sinha) May 2, 2018
Learn names. Love more. pic.twitter.com/ofOeUHtWTH
இதனால் டெல்லியின் வெப்பநிலை மொத்தமாக குறைந்தது. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலுடன் சேர்த்து மழையும் பெய்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி புயல் வீசுகிறது. இது மிகவும் அதிக அளவில் டெல்லியை பாதித்து இருக்கிறது. இன்று 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகத்தான் வெப்பநிலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.