இந்தியாவில் “புகை விடும்” பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பாம் - மத்திய அரசின் திடுக் அறிக்கை!
டெல்லி: இந்தியாவில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சிகரெட் நுகர்வு குறித்த தகவல் அறிக்கை ஒன்றினை லோக்சபாவில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "2014-15 ஆண்டுகளில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விற்பனை வீழ்ச்சிதான்:
இது 2012-13 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டதை விட 10 பில்லியன் குறைவு. அதேபோல் சிகரெட் உற்பத்தி 117 பில்லியனில் இருந்து 105.3 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பெண்களிடம் ஜாஸ்தி:
இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஹப்பா அவ்ளோ பேரா?:
1980 ஆம் ஆண்டில் 53 லட்சமாக இருந்த சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2012-ல் 127 லட்சமாக அதாவது 1.27 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 32 ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
அடிச்சு விடுங்கம்மா:
2009-10 ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் 24 சதவீதம் ஆண்களும், 17 சதவீதம் பெண்களும் புகையில்லா குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.