கல்வித் தரம் பாதிப்பு என புகார்... விரைவில் ரத்தாகிறது 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி திட்டம்
டெல்லி : பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சியடைய வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கட்டாயக் கல்விச் சட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களை 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அடையச் செய்யும் நடைமுறை தற்போது உள்ளது.
இந்நிலையில் கல்வி ஆலோசனைக் குழு வாரியத்தின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை டெல்லியில் விளக்கிய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, கட்டாயத் தேர்ச்சி திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகக் கூறினார்.
கட்டாயத் தேர்ச்சி மூலம் கல்வித் தரம் குறைந்து வருவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இந்த பரிசீலனை நடந்து வருவதாகக் கூறிய ஸ்மிருதி இரானி இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்றார்.
கல்வியில் இடை நிற்றலைத் தடுக்கவே 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை ரத்து செய்தால், கல்வியறிவு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.