For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வதேரா பெயரைவிட என் பெயரைத்தான் பிரியங்கா அதிகமாக சொல்கிறார்... ஸ்மிருதி இரானி சுளீர்

Google Oneindia Tamil News

அமேதி: கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தமது கணவர் வதேராவின் பெயரைவிட என் பெயரைத்தான் அதிகமாக உச்சரிக்கிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.

5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 51 தொகுதிகளில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் அமேதியும் அடங்கும். இத்தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோதுகின்றனர்.

Smriti Irani Slams Rahul Gandhi

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி இத்தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய போது செய்தியாளர்களிடம் ஸ்மிருதி இரானி கூறியதாவது:

5 ஆண்டுகளுக்கு முன்னர் என்பது பெயர் கூட பிரியங்காவுக்கு தெரியாது. இப்போது என் பெயரைத்தான் அதிகமாக உச்சரிக்கிறார் பிரியங்கா. கணவர் வதேரா பெயரை கூட அத்தனை முறை உச்சரித்திருப்பாரா என தெரியவில்லை.

ஒரு நாயகி உதயமாகிறாள்.. தேசிய அளவில் உருவாகும் 3ம் அணி? மாநில கட்சிகளின் அசத்தல் பிளான் பி! ஒரு நாயகி உதயமாகிறாள்.. தேசிய அளவில் உருவாகும் 3ம் அணி? மாநில கட்சிகளின் அசத்தல் பிளான் பி!

அமேதி தொகுதியில் வாக்குச் சாவடிகளை காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றுகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க ட்வீட்டர் பதிவு போட்டேன்,

இத்தகைய அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ராகுல் காந்தியை தண்டிப்பதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

English summary
Union Minister Smriti Irani told reporters that "I tweeted an alert to administration and EC(alleging booth capturing in Amethi), hope they take action. People of the country have to decide whether this kind of politics of Rahul Gandhi should be punished or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X