For Quick Alerts
For Daily Alerts
Just In
இளம்பெண் வேவு- மோடிக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய குஜராத் போலீஸ் மறுப்பு
டெல்லி: இளம்பெண் வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அம்மாநில போலீஸ் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இளம்பெண் ஒருவரை குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது அமித் ஷா, நரேந்திர மோடிக்காக கண்காணித்தார் என்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் அரசு விசாரணை நடத்த இரு நபர் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேபோல் மத்திய அரசும் விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில் குஜராத் மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் ஷர்மா, மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க குஜராத் மாநில போலீசார் மறுத்துவிட்டார்.
Comments
English summary
Gujarat Police on Monday refused to file FIR against Narendra Modi, Amit Shah and others over snooping row.
Story first published: Monday, January 6, 2014, 16:41 [IST]