சரிதா நாயரிடம் இருந்து அரசியல்வாதிகள் 'அந்த' சுகம் பெற்றதை நிரூபிக்க தயார்: பிஜு
திருவனந்தபுரம்: சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதான பெண் தொழில் அதிபர் சரிதா நாயரிடம் இருந்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல்வாதிகள் பாலியல் சுகம் பெற்றதை நிரூபிக்கத் தயார் என்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக பிஜு ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சோலார் பேனல் ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணையம் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்ட பிஜு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயரிடம் இருந்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல்வாதிகள் பாலியல் சுகம் பெற்றதை என்னால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான், அரசியல் தலைவர்கள் ஹிபி ஈடன், அரயதன் சவுகத், ஏ.பி. அனில் குமார், அவரின் உதவியாளர் நஸ்ருல்லா ஆகியோரும் சரிதாவிடம் இருந்து பாலியல் சுகம் பெற்றுள்ளனர்.
10 மணிநேரம் அவகாசம் அளித்தால் உம்மன் சாண்டிக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் சிடிகளை அளிக்கத் தயார்.
இது தொடர்பாக நான் உண்மையை கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன் என்றார்.
உம்மன் சாண்டி சரிதாவிடம் இருந்து பாலியல் சுகம் பெற்றதுடன், ரூ.5 லட்சம் லஞ்சமும் வாங்கியதாக முன்பு பிஜு தெரிவித்திருந்தார். சரிதாவிடம் இருந்து பாலியல் சுகத்தை தான் பெற்றதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.