சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் அனுமதி! மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு!!
2004-2009ம் ஆண்டு லோக்சபா சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி. 2008ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி விலகி கொண்டது. ஆனால் சோம்நாத் சட்டர்ஜியோ தமது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அப்போதே அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சோம்நாத் சாட்டார்ஜி. 84 வயதாகும் அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அப்போது, அவரது உடலில் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டுபிடித்து அதை மருத்துவர்கள் அகற்றினர். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
உடனடியாக தனியார் தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சோம்நாத் சட்டர்ஜி சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனியார் மருத்துவமனை நிர்வாகி பி. டாண்டன், சோம்நாத் சட்டர்ஜியின் உடலில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் மீண்டும் சிறிய அடைப்பு ஏற்படுள்ளது. அதை நீக்கியுள்ளோம். தற்போது அவர் உடல்நலன் சீராக இருக்கிறது என்றார்.