மது அருந்த காசு தராத தாய்.. தலையில் அடித்து கொன்று.. மூளையை வறுத்த கொடூர மகன்
தாயை கொன்று மூளையை வறுத்து சாப்பிட முயன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்
ராய்கார், சத்தீஷ்கர்: தண்ணி அடிக்க காசு தரவில்லை என்பதால், பெற்ற தாயை மண்டையில் அடித்து கொலை செய்து.. பிறகு மூளையை தனியாக எடுத்து.. அதை எண்ணெய் சட்டியில் வறுத்து சமைத்து.. சாப்பிட முயன்ற கொடூர நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.
ராய்கார்அருகே உள்ள கிராமம் போடால்டா. இங்கு சிதாராம் ஓராயான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் தண்ணி அடிப்பவர் மட்டுமல்ல.. போதைக்கு அடிமையானவரும் கூட. எந்த வேலை வெட்டிக்கும் போவதில்லை. குடிப்பதற்கு பணம் கேட்டு தன்னுடைய அம்மாவை தொந்தரவு செய்து வருவது வாடிக்கை.
இப்படித்தான் சம்பவத்தன்றும் மகன் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். கையில் பணம் இல்லை என்று அம்மா சொன்னதால், ஆத்திரம் அடைந்த அவரை அடித்து உதைத்துள்ளார். மண்டையிலேயே கம்பியை வைத்து அடித்து நொறுக்கி உள்ளார். பிறகு தாயின் மண்டைக்குள் இருந்து மூளையை தனியாக வெளியே எடுத்து, அதனை வறுத்து சமைத்து சாப்பிட முயன்றுள்ளார்.
மாமனாரின் பாலியல் தொல்லை.. கம்பியால் அடித்தே கொன்ற மருமகள்.. தடுக்க வந்த மாமியாரும் பலி!
அப்போது, அவரது அண்ணி அங்கு வந்து பதறிபோய் சத்தம் போடவும், சிதாராம் அங்கிருந்து ஓடிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்தனர். எண்ணெய் சட்டியில் தாயின் மூளையை வறுத்து வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்து போய்விட்டனர். இதையடுத்து தப்பி ஓடி பதுங்கி இருந்த சிதாராமை கைது செய்தனர்.