அப்பா பால்காரர்... டோணிதான் இன்ஸ்பிரேஷன்.. கிரிக்கெட் உலகில் கலக்க போகும் இளம் வீரர்
நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த அணியில் ராஞ்சியை சேர்ந்த வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பங்கஜ் யாதவ் என்ற அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அதே போல் அவர் வீட்டில் யாருக்கும் அவர் கிரிக்கெட் விளையாடுவதே பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் நேரடியாக இந்திய அண்டர் 19 அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இதனால் அவர் இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளார்.
அப்பா பால்காரர்
இந்திய அண்டர் 19 அணியில் தற்போது சேர்ந்து இருக்கும் பங்கஜ் யாதவின் தந்தை பால்காரர் ஆவார். இவர்களது குடும்பமே மிகவும் வறுமையான குடும்பம் ஆகும். தினமும் மூன்றுவேளை சாப்பிடுவதற்கு கூட பணம் இருக்காது என்று இவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தினமும் கிரிக்கெட் போட்டி முடித்துவிட்டு களைப்பில் சமயங்களில் சாப்பிடாமலே தூங்குவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
டோணி
இவர் தனக்கு கிரிக்கெட் உலகில் டோணி தான் எல்லாமே என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் டோணியை பார்த்துதான் தான் வளர்ந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் எதிர்காலத்தில் டோணி போல மாறவேண்டும் என்றும் ஆசை தெரிவித்து இருக்கிறார் பங்கஜ் யாதவ். டோணியும் இவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் பிடிக்காது
இந்த நிலையில் இவரின் தந்தையும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "எனக்கு அவன் கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கூட பிடிக்காது. அவன் எப்போதும் படிப்பில் நன்றாக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது கிரிக்கெட்டில் பெரிய ஆள் ஆகி இருக்கிறான். அவனுக்கு டோணி பிடிக்கும். ஒருநாள் அவரை போல பெரிய ஆளாக வருவான்'' என்று கூறியுள்ளார்.
சாதனை
இவர் அண்டர் 19 அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதே மிகவும் ஆச்சர்யமான விஷயம் ஆகும். இவர் முதல்தர போட்டிகள் எதிலும் பெரிதாக விளையாடியதே இல்லை. அதேபோல ஐபிஎல், ராஞ்சி போட்டிகளிலும் விளையாடியது இல்லை. ஆனாலும் மிகவும் திறமையான வீரரான இவர் நேரடியாக அண்டர் 19 உலகக் கோப்பை அணிக்கே தேர்வாகி உள்ளார். ஜனவரி 14 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியை இவர் விளையாடுவார்.