ராகுல் பதவியேற்பு விழாவில் பட்டாசு சப்தம் கேட்டு கோபமடைந்த சோனியா!
ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் பட்டாசு சப்தம் கேட்டு சோனியா காந்தி கோபமடைந்தார்.
Recommended Video
டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்ற ராகுலை சோனியா வாழ்த்தி பேசும் போது பட்டாசு வெடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு மனதாக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று பதவியேற்று கொண்டார்.
அதற்காக டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசுகள் மற்றும் இனிப்புகளுடன் காத்திருந்தனர். விழா மேடைக்கு வந்த ராகுல் காந்தி, சோனியா, மன்மோகன் முன்னிலையில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது மகிழ்ச்சி அடைந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். முதலில் ராகுலை மன்மோகன் சிங் வாழ்த்தி பேசினார். இதையடுத்து சோனியா காந்தி பேசவந்தார்.
அப்போதும் பட்டாசு சப்தம் காதை பிளந்தது. இதனால் கோபமடைந்த அவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தால் நான் எப்படி பேசுவது என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார். பின்னர் தொண்டர்கள் அமைதியான பிறகு, அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.