For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் சோபர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் சோபர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் இன்று அதிகாலையே இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. அங்கு சோபர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் இன்று இன்று சோபர் வனபகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர்.

Sopore Encounter: Two terrorists have been gunned down by security forces

தேடுதலின் முடிவில் ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் கடும் துப்பாக்கிசூடு சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராணுவத்தின் தரப்பில், 2 ராணுவத்தினர் லேசாக காயம் அடைத்துள்ளனர். அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

English summary
Sopore Encounter: Two terrorists have been gunned down by security forces. Search operation continues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X