For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தீதி'யை சந்தித்த 'தாதா' கங்குலி: திரிணாமூல் காங்கிரஸில் சேர மறுப்பு

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்தார். அப்போது அவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சென்று மேற்கு
வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

Sourav Ganguly meets Mamata, rejects offer to join Trinamool

இந்த சந்திப்பு குறித்து மேலும் தெரிவிக்க விரும்பாத கங்குலி தற்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை என்றார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் வருண் காந்தி கங்குலியை டெல்லியில் சந்தித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கங்குலியை விளையாட்டுத் துறை அமைச்சராக பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை காலமாக கங்குலிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கங்குலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மேற்கு வங்க அரசு கௌரவித்தது.

English summary
Former Indian cricket captain Sourav Ganguly met West Bengal Chief Minister cum Trinamool Congress chief Mamata Banerjee on Thursday evening and turned down the offer to join her party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X