For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தலில் 'தேவ்யானி'க்கு சீட் கொடுக்க முன்வருகிறது சமாஜ்வாடி
லக்னோ: விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவ்யானிக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிற முடிவில் இருக்கிறதாம் சமாஜ்வாடி கட்சி,.
தேவ்யானி விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேவயானிக்கு 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சி சீட் தருவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில அமைச்சர் முகமத் அசாம் கான் கூறுகையில், தேவ்யானி தமது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினால், அடுத்த தேர்தலில் ராம்பூர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடலாம். வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று பின்னர் அவமதிப்பு செய்வதவர்களுக்கு எதிராக உறுதியாக போராடலாம் என்றார்.
Comments
English summary
Amidst outrage over the mistreatment of arrested diplomat Devyani Khobragade in New York, Samajwadi Party's leader and Minister for Urban Development and Minorities Welfare Mohammad Azam Khan has offered a ticket to her to contest Lok Sabha elections from Rampur.
Story first published: Saturday, December 21, 2013, 9:23 [IST]