சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்: சமாஜ்வாடி அறிவிப்பு
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியாவும் அவரது மகன் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் அஜய் அகர்வாலும் அமேதியில் ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானியும் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்திருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் மணிபுரி மற்றும் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ளது.