ஜெ. சொத்துக் குவிப்பு வழக்குக்கு புது நீதிபதி பொறுப்பேற்பு.... அக்.30-ந் தேதி ஆஜராக ஜெ.க்கு உத்தரவு
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பவானிசிங்கை கர்நாடகா அரசு நீக்கியது. அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அத்துடன் கடந்த மாதம் 30-ந் தேதியுடன் ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து கர்நாடகா அரசு பரிசீலிக்கவும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் புதிய நீதிபதியாக முடி கவுடா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட முடி கவுடா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 30-ந் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.