பறக்கும் விமானத்தில் பணிப்பெண்ணை தனது சீட்டில் உட்கார வைத்த ஸ்பைஸ்ஜெட் பைலட் பணி நீக்கம்
மும்பை: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானத்தில் விமானியின் இருக்கையில், பணிப்பெண்ணை அமர வைத்த பைலட் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பணியாற்றிய விமானி, அதே விமானத்தின் பணிப்பெண்ணை தன்னுடன் அமர வைத்துள்ளார். இந்த தனி சலுகையை செய்ததற்காக, விமானி அறையில் இருந்த மற்றொரு சக விமானியை வெளியே செல்லும்படியும் அவர் கூறியுள்ளார்.
தனது இருக்கையில் பணிப்பெண்ணை அந்த விமானி அமர வைத்ததுடன், பணிப்பெண்களின் தலைவரையும் அவர் கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த பைலட்டை பணிநீக்கம் செய்து ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு விவகாரங்களில் அலட்சியம் காட்டியதால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.