கேரளாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் உயர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டசபையில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். சிவகுமார் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
2004-2005 நிதியாண்டு முதல் பார்த்தால் அப்போது மாநிலத்தில் 440 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,766 ஆக அதிகரித்துள்ளது. 2011-2012ம் நிதியாண்டில் புதிதாக 1, 680 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் மாத்ததுடன் முடிந்த நிதியாண்டில் மேலும் 1,177 பேர்
ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
தற்போது மாநிலத்தில் 17 ஆயிரத்து 593 பேர் ஹெச்.வி.ஐயால் பாதிக்கப்படுள்ளனர். 8 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்திலேயே பாலக்காடு மாவட்டத்தில் தான் அதிகமாக 1, 381 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். திருவனந்தபுரத்தில் 898 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.