பூரி ஜெகநாதர் கோயிலை முன்வைத்து ஒடிஷாவுக்கு சாபமிடும் சங்கராச்சாரி
புவனேஸ்வர்: பூரி ஜெகநாதர் கோவிலை ஒரு கம்பெனி போல மாற்றிவிட்டனர்.. ஆச்சாரங்களை மீறினால் ஒடிஷாவுக்கே தீராத நோய்கள் வந்து அல்லல்பட வேண்டியதிருக்கும் என்று பூரி சங்கராச்சாரியார் சாபம்விட்டுள்ளார்.
பூரி கோவர்தன் பீட சங்கராச்சாரியாக இருப்பவர் ஸ்வாமி நிசலனந்தா சரஸ்வதி. பூரி ஜெகநாதர் கோயில் நடைமுறைகள் குறித்து கடும் அதிருப்தி அடைந்து இந்த சங்கராச்சாரி தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"பூரி ஜெகநாதர் கோயிலை கம்பெனி போல மாற்றிவிட்டனர். கம்பெனியில்தான் ஊழியர்கள் போராட்டம் நடத்துவார்கள். இங்கே ஜெகநாதர் கோயிலிலும் அப்படித்தான் நடைபெறுகிறது.
ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தின் போது ஒவ்வொரு முறையும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதுவும் ஜெகநாதர் தேரோட்டத்தின் போது தேரின் மீது கோயில் பணியாளர்கள் ஏறிக் கொள்வதெல்லாம் பெரும் பாவச் செயல்.
இப்படியெல்லாம் செய்தால் ஒடிஷா மாநிலம் கடுமையான வியாதிகளால் பாதிக்கப்படும் நிலைமை வந்துவிடும்" என்பதுதான் பூரி சங்கராச்சாரியின் சாபம். இதற்கு ஜெகநாதர் கோயில் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.