ஸ்ரீதேவியின் உடல் நாளைதான் மும்பை வருகிறது
ஸ்ரீதேவிக்கு ஜூஹு பகுதியில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அவரது மறைவால் இந்திய ரசிகர்களே சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Recommended Video
துபாய் : ஸ்ரீதேவியின் உடல் நாளை மும்பை வருகிறது. அவருக்கு இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண விழாவில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷியுடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். ஆனால் அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் குளியலறையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அவரது திடீர் இறப்பால் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களும் மீளா சோகத்தில் உள்ளனர். அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உறவினர்களிடம் தடயவியல் அறிக்கை வழங்கப்பட்டது.
நாளை உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும். பின்னர் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீதேவியின் பூத உடல். அங்கு குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை அவருக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. அவரது உடலை காண வேண்டும் என்பதற்காக மும்பை அந்தேரியில் உள்ள லோகன்ட்வாலா காம்ப்ளஸில் உள்ள அவரது வீடு முன்பு ரசிகர்கள் திரண்டுள்ளனர்.