ஸ்டெர்லைட் ஆலை மாசு: முன்னாள் நீதிபதி தலைமையில் ஆய்வு குழு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரம் மீண்டும் பெரிதாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் சீராய்வு பணிகளை செய்ய அனுமதித்தது.
அதன்பின் அந்த ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டு இருந்த அரசு ஆணையை ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டது. இது தமிழக அரசுக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.கே.வசிப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆலையில் இருந்து வெளியாகும் மாசு குறித்து ஆராய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 6 வாரத்திற்குள் குழு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.
இந்த குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்தே, தீர்ப்பு வழங்கப்படும். இதனால் இந்த ஆய்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.