டோணி வீடு மீது 5வது முறையாக கல்வீச்சு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வீடு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது. நேற்று ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது சர்வதேச ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
நேற்றைய ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு டோணியின் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த சமயம் வீட்டில் டோணியின் குடும்பத்தார் யாரும் இல்லை. மேலும் இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு கிரிக்கெட் போட்டி காரணம் இல்லை என்று டோணியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டோணியின் மைத்துனர் கௌதம் குப்தா கூறுகையில்,
இதோடு 5 முறை டோணியின் வீடு மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராவில் பதிவானதை பார்த்துவிட்டு முறையே போலீசில் புகார் கொடுக்கப்படும் என்றார்.