தஜிகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: டெல்லி, பஞ்சாப், காஷ்மீரும் குலுங்கியது
டெல்லி: தஜிகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
தஜிகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரகுலில் இருந்து 111 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பிற்பகல் 1.30 மணிக்கு வட இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லி தவிர பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது தவிர உஸ்பெகிஸ்தானின் கிழக்கு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
திடீர் என கட்டிடங்கள் குலுங்கியதால் பயத்தில் அலறியடித்து வெளியே ஓடி வந்ததாக நொய்டாவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.