ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- கடும் நில அதிர்வு - ரிக்டரில் 3.6 அலகுகளாக பதிவு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன. முதலில் இது நிலநடுக்கம் என தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தால் உறுதி செய்யப்பட்டாததால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணியளவில் சக்திவாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஆனால் இது நிலநடுக்கம்தானா? என்பது தொடக்கத்தில் உறுதியாகவில்லை.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் விமானங்கள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் எழுந்த அதிர்வா? அல்லது பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிருபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டதால் ஏற்பட்ட நில அதிர்வா? என குழப்பம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி
இந்த நிலையில் தேசிய நிலநடுக்க ஆய்வு மையமானது, ஜம்மு காஷ்மீரில் உணரப்பட்டது நிலநடுக்க அதிர்வுகள்தான் என உறுதி செய்து அறிவித்தது. ஶ்ரீநகரின் வடக்கே 11 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் நில அதிர்வு குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.