பசங்களுக்கு எக்ஸாம் இருக்கு.. நேரத்தை வீணடிக்கிறீர்கள்.. மோடிக்கு கபில் சிபல் அட்வைஸ்
Recommended Video
டெல்லி: மாணவர்களுக்கு தேர்வு நெருங்குகிறது. உரையாடல் என்ற பெயரில் அவர்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அறிவுரை வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது குறித்து 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி 3-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள டல்கட்டோரா உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் நேரடியாக 1050 மாணவர்கள் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் டிவியில் பார்த்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில் மாணவர்களுக்கு தேர்வு நெருங்குகிறது. அவர்களை தயார் செய்ய விடாமல் மோடி உரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
எந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் தான் படித்த படிப்புகளை பகிரங்கமாக சொல்கிறார்களோ அந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.