விஞ்ஞானி நம்பி நாராயணன் கைதுக்கு பின்னணி இதுதான்.. சு. சாமி திடுக் தகவல்
Recommended Video
டெல்லி: விஞ்ஞானி நம்பி நாராயணன் சர்வதேச நாடுகளின் பொறாமையால் பழி தீர்க்கப்பட்டவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ராக்கெட் விஞ்ஞான ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ததாக 1994ல் கைது செய்யப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அது பொய் வழக்கு என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ள நிலையில், அவருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
I welcome the SC Orders on the Rocket Scientist Nambi Narayanan. He was a victim of the international jealousy against India’s capability to produce world’s cheapest satellite launching rocket launchers. Shame on UPA
— Subramanian Swamy (@Swamy39) September 14, 2018
இதுபற்றி சு.சாமி ட்விட்டரில் கூறியுள்ளதாவது: ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன், வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். செயற்கைக்கோள்களை ஏவ உலகிலேயே மிகவும் மலிவான ராக்கெட்டுகளை தயாரித்ததால், சர்வதேச நாடுகளின் பொறாமையால் நம்பி நாராயணன் பழி தீர்க்கப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதற்காக வெட்கப்பட வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.