7 தமிழர் விடுதலை மறுப்பு.. சு.சாமி வரவேற்பு.. இத்தாலியில் முக்கிய குற்றவாளி இருப்பதாக ட்வீட்
Recommended Video
டெல்லி: ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, 7 தமிழர் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதை பாஜக சீனியர் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருப்பதால், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி இந்த நிராகரிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Rashtrapati has flatly rejected the stupid Illegal resolution of the TN Legislative Assembly to set Rajiv Gandhi the killer conspirators free. Actually the killers are lucky that they have not been hanged as per SC .The Head conspirator is living in Italy but seriously ailing
— Subramanian Swamy (@Swamy39) June 15, 2018
இதுகுறித்து டுவிட்டரில் சு.சாமி கூறுகையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதை ஜனாதிபதி நேரடியாகவே தள்ளுபடி செய்துவிட்டார். தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிருஷ்டசாலிகள். இத்தாலியில், முக்கிய குற்றவாளி வசித்து வருகிறார். அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சு.சாமி தெரிவித்துள்ளார்.