பெங்களூரில் அதிகாலையிலிருந்து பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி
பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது.
பெங்களூர்: பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தற்போது தென்னிந்தியாவில் கோடை வெயில் வாட்டி எடுக்க தொடங்கி இருக்கிறது. முக்கியமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக வெயில் அடித்து வருகிறது.அதே சமயத்தில் எப்போதும் குளிராக பெங்களூரிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது.
ஆனால் அவ்வப்போது அங்கே மழையும் பெய்து மக்களை குளிர்வித்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கோடை வெயிலை குறைத்து, குளிர்விக்கும் வகையில் பெங்களூரில் மழை பெய்து வருகிறது.
பெங்களூரில் ஏப்ரல் இறுதி மற்றும் மே மாத தொடக்கத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறி இருந்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெங்களூரில் மிதமான மழை பெய்து வந்தது. தற்போது மீண்டும் மழை தொடங்கி இருக்கிறது.
சாந்தி நகர், ஜெயாநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது. பெங்களூர் மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு