For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூரிடம் 2வது நாளாக கிடுக்குப் பிடி விசாரணை!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரிடம் நேற்று 2-வது நாளாக டெல்லி சிறப்பு விசாரணை குழுவினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் கடந்த மாதம் 19-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

Sunanda case: Tharoor appears before SIT again

2-வது முறையாக நேற்று முன்தினம் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை முதல் இரவு வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இரவில் நடந்த விசாரணையின் போதும், ஐ.பி.எல். கிரிக்கெட் கொச்சி அணி முறைகேடு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் சசிதரூரிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது.

2-வது நாளாக சசிதரூரிடம் நேற்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. சுனந்தாவின் உடல் பிரேதபரி சோதனையின் போது அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், குடல் போன்ற உள்ளுறுப்புகள் மீண்டும் தீவிர பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அதே நாளில் தான் சசிதரூரிடம் 2-வது கட்ட விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress MP Shashi Tharoor on Friday appeared for the third time in two days before the Special Investigation Team(SIT) that is probing his wife Sunanda's mysterious death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X