Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

Sunanda Pushkar death case: Shashi Tharoor applied for an anticipatory bail

சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் சந்தர் சேகர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் சுனந்தா மர்ம மரண பற்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசி தரூர் பெயரும் குற்றப்பத்திரிகையில் உள்ளது. டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிக்கையால் சசிதரூர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+