சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரை கொன்று உடல் சிதைப்பு.. டிவி சேனல் வெளியிட்ட ஆதாரங்களால் பரபரப்பு
டெல்லி: சுனந்தா புஷ்கரின் உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக டிவி சேனல் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது.
மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சுனந்தா இறப்பதற்கு முந்தைய நாளில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேஹாவுக்கும், சுனந்தாவுக்கும் இடையே டிவிட்டரில் மோதல் நடந்திருந்தது. பாகிஸ்தான் பத்திரிகையாளர், சசிதரூருக்கு நெருக்கமானவர் என கூறப்பட்டதால், இந்தக் கொலை வழக்கில் சசிதரூருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சில ஆடியோ டேப்களை ரிபப்ளிக் என்ற ஆங்கில சேனல் நேற்று வெளியிட்டது. அந்த ஆடியோ விவரங்கள்படி, சுனந்தா உயிரிழந்தது சசிதரூருக்கு முன்பே தெரியும் என்றும், சுனந்தா 307வது அறையில் கொல்லப்பட்டு, பிறகு 345வது அறைக்கு மாற்றப்பட்டார் என்றும், அந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டிருந்தது.
மேலும், சுனந்தா புஷ்கரின் உடலில் சிதைக்கப்பட்டுள்ளது என்ற அதிிர்ச்சி தகவலையும் அந்த ஆடியோ டேப்புகள் வெளிப்படுத்துகின்றன.