சன்னி லியோனுக்கு 'ஆண்டின் சிறந்த நபர்' விருது வழங்கிய பீட்டா !
மும்பை: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு ஆண்டின் சிறந்த நபர் விருதை பீட்டா அமைப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது பீட்டா அமைப்பு. 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் பல்வேறு இந்திய பிரபலங்கள் உறுப்பினர்களாகவும், அதன் விளம்பர தூதர்களாகவும் இருக்கின்றனர்.
Recommended Video
அந்த வகையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பீட்டா அமைப்பில் பல்வேறு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தெருக்களில் இருக்கும் நாய்களை தத்து எடுக்க வலியுறுத்தும் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் பீட்டா அமைப்பில் சன்னி லியோனின் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு பீட்டா சார்பில் 'ஆண்டின் சிறந்த நபர்' (Person of the Year) என்ற விருதை வழங்கியுள்ளது. இதனை சன்னி லியோன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த தகவலை வீடியோ வடிவில் குறிப்பிட்ட சன்னி லியோன் தான் வெளியிட்ட வீடியோவில் பீட்டா வழங்கிய விருதுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
Thank you so much @PetaIndia for this!It means the world to me!Love you &all the animals so so much!! @Sachbang you rock buddy! Thank you! pic.twitter.com/oGa3sQsWaP
— Sunny Leone (@SunnyLeone) January 12, 2017