இப்ப எவ்வளவு வாங்குறீங்க... கேட்ட பத்திரிகையாளருக்கு "பளார்" விட்ட சன்னி லியோன்!
சூரத்: குஜராத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது நடிகை சன்னி லியோன் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பில் சாதிக்கத் துடிக்கும் அவர் பாலிவுட்டிலும் உணர்ச்சியை தூண்டும் வகையிலான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் சன்னி லியோனுடன் ஹோலி கொண்டாடுங்கள் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள அவர் தனது கணவர் டேனியல் வெப்பருடன் சூரத் வந்து அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கினார்.
ஹோட்டல் காரிடரில் சன்னியை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். முன்னதாக நீங்கள் ஆபாச பட நடிகையாக இருந்தீர்கள், தற்போது நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. தற்போது எவ்வளவு வாங்குகிறீர்கள் என்று அந்த பத்திரிக்கையாளர் கேட்டார்.
அதை கேட்டு கோபம் அடைந்த சன்னி அந்த கேள்வியை மறுபடியும் கேட்குமாறு கூறினார். இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்டார்.
பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட வேகத்தில் சன்னி அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இது குறித்து சன்னியின் கணவர் கூறுகையில்,
அந்த பத்திரிக்கையாளருக்கு சன்னி சரியான பதில் அளித்துள்ளார். நாங்கள் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. ஹோலி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கல்லூரி மாணவர்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதால் போலீசுக்கு போகவில்லை. ஆனால் இனி குஜராத் வர சன்னி ஆயிரம் தடவை யோசிப்பார் என்றார்.