அடடா.. தேசிய கீதத்தைத் தப்பா பாடிட்டாராமே சன்னி லியோன்.. போலீஸில் புகார்!
டெல்லி: மும்பையில் நடந்த கபடி போட்டி நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை தவறாக பாடியதாகக் கூறி நடிகை சன்னி லியோன் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மும்பையில் ப்ரோ கபடி லீக் போட்டிகள் நடந்தது. அந்த போட்டி துவங்கும் முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது. பாலிவுட் நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கீதத்தை பாடினார்.
இதற்காக அவர் சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்தாராம்.
புகார்
மும்பை நிகழ்ச்சியில் சன்னி லியோன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக உல்லாஸ் என்பவர் டெல்லியில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
என்ன தவறு?
சன்னி தேசிய கீதத்தை பாடும்போது வார்த்தைகளை சரியாக உச்சரிக்கவில்லை என்று உல்லாஸ் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பாடும் முன்பு சன்னி முறையாக பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்கிறார் உல்லாஸ்.
சன்னி
ஒரு பிரபலமான நடிகையான சன்னி தேசிய கீதத்தை தவறாக பாடினால் அது அவரது ரசிகர்களை பாதிக்கும் என்று உல்லாஸ் தெரிவித்துள்ளார். இதனால் சன்னிக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன்
முன்னதாக உல்லாஸ் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீதும் போலீசில் புகார் அளித்தார். கொல்கத்தாவில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய டி20 போட்டியின் துவக்க விழாவில் அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியாக அவர் மீது புகார் அளித்தார் உல்லாஸ்.
வீடியோ
மும்பை நிகழ்ச்சியில் சன்னி லியோன் தேசிய கீதம் பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது தான். நீங்கள் பாருங்க.