BREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2014ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் வலுத்துள்ளன.
நீதிபதி டி ஒய் சந்திரசாத், நீதிபதி இந்து மல்கோத்ரா அமர்வு தீர்ப்பளிக்கிறது
தீபக் மிஸ்ரா, ஆர். எப் நாரிமன், டி ஒய் சந்திரசாத், இந்து மல்கோத்ரா தனி தனியாக தீர்ப்பு அளிப்பார்கள்
நீதிபதி ஏ எம் கான்வில்கர் தனியாக தீர்ப்பளிக்க மாட்டார்
தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான சட்ட பிரிவில் இன்று தீர்ப்பு
இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது