உச்சநீதிமன்ற வளாகம், கேன்டீனில் நீதிபதிகள் திடீர் ஆய்வு.. என்ன காரணம்?
டெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: டெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் நீதிமன்ற கேண்டீன், ஹோட்டல் ஆகியவை இருக்கும். அங்கு வேலை பார்க்கும் நபர்களும், மக்களும், பத்திரிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது இருக்கும். டெல்லியிலும் நீண்ட நாட்களாக இது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், மதன் பி லோகூர், பானுமதி ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
நீதிமன்ற அலுவல்களை புறக்கணித்து நீதிபதிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற அலுவலகங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.
நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அலுவலக செயல்பாடு குறித்து புகார் வந்ததை அடுத்து இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.