கோச்சடையான் பட விவகாரம்.. லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.
டெல்லி: கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோச்சடையான் பட விவகாரத்தில் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் நிலுவை தொகையை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மட் நிறுவனம் தர வேண்டும் என ஆட் பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட் பீரோ நிறுவனத்திற்கு உத்தரவாதம் அளித்தப்படி கடன் தொகையை அளிக்காதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் லதா ரஜினிகாந்த் தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.
பணத்தை எப்போது திருப்பி அளிப்பீர்கள் என்று கேட்ட நீதிபதிகள், லதா ரஜினிகாந்த் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை ஏற்றுக்கொண்டனர். வரும் 10ஆம் தேதி இறுதி விசாரணையின் போது பணத்தை திரும்ப செலுத்த தயாரா உள்ளீர்களா? என்பது குறித்து இறுதியாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இல்லையெனில் எப்.ஐ.ஆர். மீதான விசாரணையை தொடர உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.