ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மறுமணம்.... கணவரைப் பிரிய காரணமாக இருந்தவரையே மணக்கிறார்
மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் மறுபடியும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது நீண்ட நாள் காதலியான சூசன் கானை கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் செய்தார். பாலிவுட் பாராட்டும் தம்பதியாக இருந்த அவர்களுக்கு ரிஹான், ரிதான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
13 ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்து விவாகரத்திற்கும் விண்ணப்பித்தனர்.
அர்ஜுன் ராம்பல்
சூசனுக்கும், பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் தான் அவர் தனது கணவர் ரித்திக் ரோஷனை பிரிந்தார் என்று கூறப்பட்டது.
சூசன்
ரித்திக்கை பிரிந்த பிறகு சூசன் அர்ஜுன் ராம்பலுடன் மிகவும் நெருங்கிவிட்டதாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின.
விவாகரத்து
எனக்கும், மெஹருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் விவாகரத்து பெறப் போவதும் இல்லை என்று அர்ஜுன் ராம்பல் அண்மையில் விளக்கம் அளித்துள்ளார்.
இரண்டாவது திருமணம்
சூசன் ரித்திக் ரோஷனின் நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபருடன் ஏற்பட்ட தொடர்பால் தான் சூசன் ரித்திக்கை பிரிந்ததாக தற்போது பேசப்படுகிறது. அந்த நபர் யார் என்று தெரியவில்லை.