மகாராஷ்டிரா பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்- லாரி ஓட்டுநரை உயிரோடு எரிக்க முயற்சி- பகீர் வீடியோ
மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் லாரி ஓட்டுநரை உயிரோடு எரிக்க முயன்ற வீடியோ பதைபதைக்க வைத்துள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தின் போது ஓட்டுநர் ஒருவரை லாரியுடன் தீ வைத்து எரிக்க முயற்சிக்கும் பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ5 உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது ஸ்வபிமானி ஷேத்காரி அமைப்பு. தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை பால் விநியோகம் செய்யப் போவதில்லை எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுவதை இந்த அமைப்பு தடுத்தும் வருகிறது. சாலைகளில் பாலை கொட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மலேகான் பகுதியில் பால்விநியோகிக்க சென்ற லாரி ஒன்றை ஸ்வபிமானி ஷேத்காரி தொண்டர்கள் வழிமறித்து ஓட்டுநருடன் தீ வைத்து எரிக்க முயன்றனர். இந்த பதற வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH: Workers of Swabhimani Shetkari Sangathna set ablaze a truck of Rajhans Milk Shop in Washim's Malegaon. Driver later escaped the fire without any injuries. The organisation is demanding price hike for milk farmers. #Maharashtra pic.twitter.com/LOSyim9oLj
— ANI (@ANI) July 16, 2018