ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக தொண்டர்கள் கொடூர தாக்குதல்
பாஜக தொண்டர்களால் சுவாமி அக்னிவேஷ் கொடூரமாக தாக்கப்பட்டார்.
ராஞ்சி: சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது ஜார்க்கண்ட்டில் பாஜக தொண்டர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த சுவாமி அக்னிவேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பாகுர் என்ற இடத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
பின் ஒருகட்டத்தில் அக்னிவேஷை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதில் சுவாமி அக்னிவேஷ் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அக்னிவேஷ், கடவுளின் கருணையால் உயிர் பிழைத்திருக்கிறேன். என்னை கொலை செய்யும் நோக்கத்தில்தான் தாக்குதல் நடத்தினர்.
எதற்காக என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. இது ஒரு திட்டமிட்ட சதி என்றார்.
Activist Swami Agnivesh was thrashed, allegedly by BJP Yuva Morcha workers in Jharkhand's Pakur, earlier today. More details awaited. pic.twitter.com/59kqoV9uj4
— ANI (@ANI) July 17, 2018