For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய சுப்ரமணியசுவாமி மனு: செப். 7ல் விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக அரசு தன்மீது தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு, 7 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மீது தமிழக அரசின் சார்பில் 6 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Swamy moves SC to quash defamation cases

இதனை எதிர்த்து சுப்ரமணியசுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சுப்ரமணியசுவாமி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி, சுப்ரமணியசுவாமி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில், அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி இடைக்கால மனு தாக்கல் செய்ய சுப்ரமணியசாமி தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.

இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவை வரும் திங்கட்கிழமையன்று 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்

English summary
Bharatiya Janata Party leader Subramanian Swamy on Wednesday moved the Supreme Court for quashing six criminal defamation cases against him filed by the Tamil Nadu government.A Bench led by Justice Dipak Misra agreed to hear his application on September 7 .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X