அதெப்படி அர்னாப் கோஸ்வாமி 'ரிபப்ளிக்'னு டிவி பேரு வைக்கலாம்? பஞ்சாயத்தை கூட்டிய சு.சுவாமி
அர்னாப் கோஸ்வாமி தம்முடைய டிவி சேனலுக்கு ரிபப்ளிக் என பெயர் வைத்துள்ளதற்கு சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் சு.சுவாமி கடிதம் அனுப்ப
டெல்லி: டைம்ஸ் நவ்-ல் இருந்து விலகிய அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் என்ற பெயரில் டிவி சேனல் தொடங்குவதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
டைம்ஸ் நவ் சேனலில் உரத்த குரலில் பேசியே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் அர்னாப் கோஸ்வாமி. அவருக்கு அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.
டைம்ஸ் நவ் சேனலில் இருந்து விலகிய அர்னாப் கோஸ்வாமி, 'ரிபப்ளிக்' என்ற பெயரில் புதிய சேனல் தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் 1,00,000 பாலோயர்களுடன் ரிபப்ளிக் டிவி இயங்கியும் வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் இந்த நிறுவனத்தில் ரூ30 கோடி முதலீடு செய்திருக்கிறார். நிர்வாக இயக்குநராக அர்னாப் கோஸ்வாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரிபப்ளிக் என்ற பெயரில் டிவி சேனல் நடத்த உரிமம் தரக் கூடாது; அது நாட்டின் சின்னங்கள் தொடர்பான சட்டத்தை மீறுவதாகும் என புதிய பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார் பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.