ஆம் ஆத்மி அலுவலகத்தில் உற்சாக வெள்ளம்! இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தலைமையகத்தில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. முதல் அரைமணிநேரத்தில் ஆம் ஆத்மி- பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி இருப்பதாக தோற்றம் ஏற்பட்டது.
Sweet distribution at AAP office in Delhi #DelhiPollResults pic.twitter.com/U7nmQ8er7h
— ANI (@ANI_news) February 10, 2015
பின்னர் ஒரு மணிநேரத்தில் ஆம் ஆத்மி விஸ்வரூபமெடுத்து முன்னிலையை நோக்கி விரைந்து சென்றது. இன்று காலை முதலே உற்சாகமாக டெல்லி ஆம் ஆத்மி தலைமையகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் முன்னணி தகவல்களைக் கேட்டு உற்சாகமடைந்தனர்.
ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். நாடு முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.