கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நான் மம்தாவை கட்டிப்பிடிப்பேன்.. பாஜக தேசிய செயலாளர் சர்ச்சை பேச்சு
கொல்கத்தா: ஒரு வேளை நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அப்படியே முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனுபம் ஹஸ்ரா பாஜகவின் புதிய தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் தெற்கு 24 பர்கானாவில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில்,
"எங்கள் தொண்டர்கள் கொரோனாவை விட பெரிய எதிரியுடன் போராடுகிறார்கள். அவர்கள் மம்தா பானர்ஜியுடன் போராடுகிறார்கள். முகமூடி இல்லாமல் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவர்கள் (பிஜேபி உறுப்பினர்கள்) அதை எதிர்த்துப் போராட முடிந்தபோது, அவர்களால் முகமூடி அணியாமல் கொரோனாவுக்கு எதிராகவும் போராட முடியும் என்று நினைக்கிறார்கள். "நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், நான் நேராக சென்று மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மம்தாவின் ஆட்சியில் சிகிச்சை மோசமாக அளிக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் மண்ணெண்ணெய் மூலம் எரிக்கப்படுகின்றன. கொரோனாவால் இந்தவர்களின் முகத்தை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள் . இறந்த பூனைகள் அல்லது நாய்களைக் கூட இப்படி நடத்ததுவது கிடையாது. அதைவிட மோசமாக நடத்துகிறார்கள்" என்றார்.
சென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு!
இவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அனுபம் ஹஸ்ராவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவரது பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது. இதுபோன்ற பைத்தியக்கார பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளது.
எனினும் மேற்கு வங்கநில பாஜக தலைமை பாஜகவின் புதிய தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவின் கருத்து அவரது சொந்தக்கருத்து என பின்வாங்கிவிட்டது. "இதுபோன்ற கருத்துகளை நாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும், "என்று அம்மாநில பாஜக தலைவர் கூறினார்.