ராத்திரியில் ஆண் கோச்சின் அறையிலிருந்து வெளியேறிய வீராங்கனைகள் ...வீடியோவால் பரபரப்பு
ஹைதராபாத்: சட்டீஸ்கரைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் சிலர், ஆண் பயிற்சியாளர் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானதால் அந்த மாநில டேபிள் டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சட்டீஸ்கர் வீராங்கனைகள் கடந்த டிசம்பர் மாதம் ஆந்திராவில் முகாமிட்டு இருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் 25ஆம் தேதி நள்ளிரவில் பயிற்சியாளரின் அறையில் இருந்து வீராங்கனைகள் சிலர் வெளியேறும் சில காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வீராங்கனைகள், பயிற்சியாளர் ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.