ரூ. 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கருவை கலை: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு பஞ்சாயத்து உத்தரவு
பாட்னா: பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பமான சிறுமியை ரூ. 2 லட்சம் வாங்கிக் கொண்டு கருவை கலைக்குமாறு பஞ்சாயத்தார் உத்தரவிட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ளது சுபன்கர்பூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த அருண் பகத் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் சிறுமி கர்ப்பமானார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பஞ்சாயத்து கூடியுள்ளது. பஞ்சாயத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.
ஆனால் பஞ்சாயத்தினரோ ரூ. 2 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு கருவை கலைத்துவிடுமாறு சிறுமிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் பகத்தை தேடி வருகிறார்கள்.
இது தவிர பணம் வாங்கிக் கொண்டு கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து ஆட்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.