For Daily Alerts
Just In
எடப்பாடி ஆட்சி எப்போது ஒழியும் என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.. புகழேந்தி காட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எப்போது ஒழியும் என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எப்போது ஒழியும் என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததை முன்னிட்டு தினகரன் தரப்பினர் டெல்லியில் முகாமிட்டிருந்தனர்.
அப்போது தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் லஞ்சம் தாண்டவமாடி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இரட்டை இலை சின்னம் சசிகலா, டிடிவி.தினகரன் தரப்புக்கு கிடைக்கும் என்றும் புகழேந்தி தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எப்போது ஒழியும் என மக்கள் நினைக்கிறார்கள் என்றும் புகழேந்தி சாடினார்.
Comments
pugazhendi dinakaran edappadi palanisamy double leaf புகழேந்தி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை
English summary
Dinakaran supporter Pugazhendi says Sasikala and Dinakaran will get the double leaf symbol. He also says that Tamil Nadu people thinking when the Edappadi ruling will end.
Story first published: Friday, April 20, 2018, 17:16 [IST]